”நான் மீண்டும் வருவேன்”.. பாராட்டு விழாவில் கேப்டன்

Arun Prasath

வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:15 IST)
மக்களுக்கு நல்லது செய்ய நான் மீண்டும் வருவேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அவ்விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “மக்களுக்கு நல்லது செய்ய நான் மீண்டும் வருவேன்” என கூறியுள்ளார். முன்னதாக தேமுதிக ஒரு பலமான எதிர்கட்சியாக திகழ்ந்தது. பின்பு விஜயகாந்தின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கள அரசியலில் ஈடுபாடு கொள்ளவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்