காவிரி விவகாரத்தில் அனல் கக்கிய விஜயகாந்தின் பேச்சு: இது பழசு!

புதன், 14 செப்டம்பர் 2016 (10:50 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சில கன்னட வெறியர்கள் வன்முறை வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.


 
 
கர்நாடக நடிகர்கள் கூட கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக போரட்டம் நடத்தினர். ஆனால் தமிழகத்தில் நடிகர் சங்கம் எந்த போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
 
தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் போராட்டங்களை முன்னெடுக்காத நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். இதனையடுத்து விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது தமிழகத்துக்கு ஆதரவாக காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை அதிகமானோர் பார்த்து வருகின்றனர்.

 

 
 
இந்த போராட்டத்தில் விஜயகாந்த் அனல் பறக்க பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்