விஜய்க்கு ஓட்டு கேட்டு வந்த எம்.ஜிஆர்! – திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:54 IST)
திருச்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பல கட்சிகளும் வேட்புமனு அளித்துள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பல இடங்களில் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாநகராட்சி 36வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அருள்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை அழைத்து சென்று, தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்