சென்னையிலிருந்து நேற்று மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் காரணமாக பாஜக மேல் இட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பயணம் செய்வதற்கு சிரமத்துக்கு உள்ளாகினர்.
அதன் பின்னர், விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு காலை 10:45 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் விமானத்தின் இயந்திர கோளாறு குறித்து பயணிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.