விஜய்யின் தவெக மாநாட்டிற்கு புதிய சிக்கல்.. அனுமதி கிடைக்குமா?

Mahendran

புதன், 25 செப்டம்பர் 2024 (10:41 IST)
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையின் அனுமதி தாமதமானதன் காரணமாக, அது அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதன் பின்னர், அக்டோபர் 27ஆம் தேதியிலும் அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக இந்த மாநாட்டிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 30ஆம் தேதிக்கு தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரத்திற்கு மூன்று நாட்கள் காவல்துறை பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால், மாநாட்டிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கான பாதுகாப்பு கோரி மனு அளித்து, நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடமிருந்து எந்த பதிலும் பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனால், இரண்டாவது முறையாகவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒத்தி போகுமா? அல்லது குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்