ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து, கோயம்பேடு சந்தை: வணிகர் சங்க தலைவரின் கோரிக்கைகள்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:11 IST)
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து, கோயம்பேடு சந்தை:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வருகிறது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு காரணமான கோயம்பேடு மார்க்கெட் முழு அளவில் மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் துணை முதலமைச்சரிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார் 
 
அதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோயம்பேடு சந்தை போல் தமிழகம் முழுவதும் பிரதான சந்தைகளை திறக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கடைகள் திறக்கும் நேரம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபாடு இருக்ககூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்
 
இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்களிடம் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்