நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கூறும் போது “முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்தே அவர் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அவரின் நலம் விரும்பாத சிலர், பொறாமையின் காரணமாக அவரது உடல் நலம் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்.