தமிழக மீனவர் பிரிட்ஜோ, இந்திய எல்லைப் பகுதியை கடந்ததாக இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மரணத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டு இலங்கை கடற்படையினருடையது என்பதை உறிதி செய்த பின் அவர்கள் மீது நேற்று மாலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.