வைகோ, அன்புமணி உள்ளிட்ட ஆறு தமிழக ராஜ்ய சபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் கிடைக்கும் என்ற நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்று வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் ஆகிய மூவர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.