200 நாட்கள் தேர்தல் பரப்புரை…. உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் திட்டம்!

திங்கள், 9 நவம்பர் 2020 (10:51 IST)
2021 தேர்தலை கணக்கில் கொண்டு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 200 நாட்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சார உத்திகளை வகுத்து வருகின்றனர். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் வரும் 20 ஆம் தேதி கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். 10 நாட்களுக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக்கொண்டு அவர் 200 நாட்கள் பரப்புரையை முடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்