வங்கக் கடலில் அடுத்தடுத்து இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழகம் உட்பட கடற்கரை மாநிலங்களில் கூடுதல் மழைக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் பொதுவாகத் தமிழ்நாடு முதல் மேற்கு வங்கம் வரையிலான கடலோரப் பகுதிகளில் கனமழையை கொடுக்கும். அதேபோல், இந்த இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.