2 அமைச்சர்கள் திடீர் விலகல்.. முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் பரபரப்பு..!

ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:25 IST)
கேரளாவில் திடீரென இரண்டு அமைச்சர்கள் விலகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பதும் இந்த அரசிற்கு பெரிய அளவில் எந்த விதமான அதிருப்தியும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகிய இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தனர்
 
இந்த நிலையில் கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்