தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்கள் நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
இதனையடுத்து, நான்காம் கட்டமாக நிறைவு விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (15.06.2025) நடைபெற உள்ளது. இதில், மாணவ, மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள்.
எதிர்கால சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்கள், இந்த பாராட்டு விழாவில் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.