தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியின் ஒருசில பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.