இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது..தினகரன்

Arun Prasath

சனி, 15 பிப்ரவரி 2020 (08:56 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதியவர் உயிரிழந்ததற்கும் சிஏஏ போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ”சிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்