கரூரில் ஜெ. நினைவு அஞ்சலி - செந்தில் பாலாஜி சபதம் (வீடியோ)

செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணியின் டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணி டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒராண்டு நிறைவு அஞ்சலியை முன்னிட்டு கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு புகழாஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழியில் அனைவரும் பயணிக்க சபதமும் எடுத்துக் கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்