சாலையைக் குத்தி பார்த்து சோதனை செய்த மாவட்ட ஆட்சியர்!

புதன், 11 நவம்பர் 2020 (09:14 IST)
திருச்சி அருகே மாவட்ட ஆட்சியர் சிவராசு புதிதாக போடப்படும் சாலையை சோதனையிட்டார்.

திருச்சி அருகே காரைப்பட்டி முதல் வேலக்குறிச்சி வரை 44 லட்ச ரூபாய் மதிப்பில் 2 கிலோ மீட்டர் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வேறு சில நலத்திட்டங்களை மேற்பார்வை இடுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வருகைதந்தார். அப்போது அவர் புதிதாக போடப்படும் சாலை தரமானதாக உள்ளதா நோண்டிப்பார்த்து சோதனை செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்