விஜயகாந்தை யார் பார்த்தால் எனக்கென்ன? டி.ராஜேந்தர் ஆவேசம்

ஞாயிறு, 3 மார்ச் 2019 (15:08 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியின்போது அவர் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

விஜயகாந்தை ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் என பலரும் போய் பார்க்கின்றார்கள். ஆனால் அவரை யார் பார்த்தால் எனக்கென்ன? என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்

மோடி பிரதமராக இருந்தாலும் ஓகே, ராகுல் காந்தி பிரதமராக இருந்தாலும் ஓகே, எடப்பாடி முதல்வராக இருந்தாலும் ஓகே, ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் ஓகே, எனக்கு என்ன வேண்டுமோ அது வந்தால் போதும் கூட்டணிக்கு ஓகே என்று கொள்கை இல்லாமல் இருக்கும் விஜயகாந்த், யாரை பார்த்தால் எனக்கென்ன? என்று டி.ராஜேந்தர் ஆவேசமாக பேசினார்

மேலும் வரும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்றும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும் டிராஜேந்தர் தெரிவித்தார். மேலும் சிம்பு இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்