1600ஆக குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (19:24 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று 16034 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,634 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7,365என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,37,896என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,750 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்