சீசன் முடிஞ்சும் வெளுக்குது; இன்னைக்கும் இருக்கு கனமழை! – எந்தெந்ந்த மாவட்டங்களில்?

புதன், 6 ஜனவரி 2021 (08:55 IST)
பருவமழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவக்காற்று காலம் முடிந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்