பழங்குடியினர் உதவித்தொகை அதிகரிப்பு – தமிழக அரசு ஆணை!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
பழங்குடியினர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களில் இயற்கை மரணம் ஏற்பட்டால் தற்போது ரூ.15 ஆயிரம் உதவித்தொகையும், ஈம சடங்கிற்கு உதவியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இனி இயற்கை மரணத்திற்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகையும், ஈம சடங்கு காரியங்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்