எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த போராட்டத்தை நடத்தக் காரணம், தமிழக அரசு கையாலாகாத அரசாக உள்ளது. எங்களை பாதுகாப்பதற்கு தான் தமிழக அரசு தவிரே, ஊழல்களில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல.
தமிழக எம்.பி.க்கள் இந்நேரம் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்க வேண்டாமா? எதற்காக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்? இனியாவது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும். ஆதரவாக குரல் கொடுக்காமல் ஒதுங்கி போனால் அது தமிழக அரசு அல்ல, அதற்கு பெயர் பிணம், என்றார்.