10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும்: மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை..!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:08 IST)
தமிழகத்திற்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு மருத்துவ துறை கோரிக்கை விடுத்துள்ளது.
 
 5 லட்சம் கோவாக்சின் மற்றும் ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் விரைவில் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்