கே.என்.நேரு, வீரபாண்டி ராஜாவை அடுத்து குறி வைக்கப்பட்ட திருச்சி சிவா: முக ஸ்டாலின் அதிரடி

புதன், 5 பிப்ரவரி 2020 (18:59 IST)
குறி வைக்கப்பட்ட திருச்சி சிவா
திருச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருந்த கே.என்.நேரு டம்மி ஆக்கப்பட்டு அந்த பதவிக்கு சமீபத்தில் அன்பில் மகேஷ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது கேஎன் நேரு, வீரபாண்டி ராஜாவை அடுத்து திருச்சி சிவா குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி சிவாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஒரு இள ரத்தம் ஒருவரை ராஜ்யசபா எம்பி பதவிக்கு நியமனம் செய்ய முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறுவதற்கு முக ஸ்டாலின் மட்டும் காரணமல்ல என்றும் பிரசாந்த் கிஷோரின் ஐடியாவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக கோஷ்டிப் பூசல்கள் களை எடுக்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் வரும் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்