கழுதைக்கு தெரியுமா கோமியத்து வாசனை!? – பாஜக தலைவர் சர்ச்சை கருத்து!

ஞாயிறு, 19 ஜூலை 2020 (15:05 IST)
கொரோனாவுடன் போராட இந்தியர்கள் பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 10 லட்சத்தை கடந்து விட்ட நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளது. அதேசமயம் கொரோனாவிற்கு இயற்கை மருத்துவமுறைகள் பலனளிக்குமா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிற்கு மேற்கு வங்க பாஜக தலைவர் பரிந்துரைத்த மருந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் ”இந்தியர்களாகிய நாம் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், கொரோனாவுக்கு எதிராக போராடவும் பசு கோமியம் அருந்த வேண்டும். இதை சிலர் கிண்டல் செய்வார்கள். மது அருந்துவோருக்கு பசுவின் மதிப்பு எப்படி தெரியும்? பசுவின் மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது” என பேசியுள்ளார்.

அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலர் அவரது கருத்தை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்