அடுத்த 3 மணி நேரம்... கெடு வைத்த வானிலை மையம்!

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:53 IST)
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தகவல். 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்டக்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூரில் கனமழை எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் சற்றுமுன் வந்த தகவலின் படி அடுத்த மூன்று மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்