ரயிலில் சாசகம் செய்த மாணவியை அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.

வியாழன், 25 நவம்பர் 2021 (22:38 IST)
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவது போன்று பள்ளி மாணவி ஒருவர் இன்று  ரயிலின் கம்பியைப் பிடித்து ஒற்றைக் காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு மாணவரும் அதேபோல் செய்தார். இந்த வீடியோ வைரலானது.  இதுகுறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அபாயகரமாக ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணர் , மாணவியை அவர்களின் பெற்றோர்களுடன் அழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்