பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன்...

திங்கள், 6 ஜூலை 2020 (17:11 IST)
இந்த உலகில் நாள்தோறும் அரிய சம்பவங்களும், ஆச்சரிய செய்திகளும், விபத்துகளும்  அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில எதிர்பாராத சம்பவங்களை தவிர்த்து நமது கவனக்குறைவால் ஏற்படும் விபரீதங்கள் தான் இதில் அதிகம்.

திருவண்ணாமலை அருகேயுள செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் என்ற இடத்தில்  ஒரு சிறுவன்( 7 வயது ) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு  ஒரு பந்து போன்ற பொருள் உள்ளதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அவர், அதை எதார்த்தமாக வாயில் வைத்துக் கடித்து விட்டான். அந்த நொடியே அது வெடித்தது.

இந்த வெடி சப்தத்தை கேட்டு அருகில் உள்ளோர் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். தாடை, மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்துள்ள சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்