குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது விபரீதம்: பேருந்து மோதி 4 பேர் சாவு

திங்கள், 4 மார்ச் 2019 (12:40 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் சென்ராயன். இவர் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்றார்.
 
ஆண்டிப்பட்டியை அடுத்த கொண்டமநாயக்கன் பட்டி அருகே சென்றதது. அப்போது  மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசுப்பேருந்து, ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் சென்ராயன், அவரது மனைவி சுதா, மகள் அபிநயா ஆகியோர் உயிரிழந்தனர். 
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சென்ராயனின் மகன் மணிகண்டனும் இறந்தார். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேருக்கு தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்