அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தளபதி...

வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:14 IST)
தி.மு.க தலைவர் மற்றும் எதிர்கட்சி தலிவரான ஸ்டாலின் நேற்று இரவு உடல் நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அதன் பிறகு மருத்துவமனை நிர்வாகத் தரப்பு கூறுகையில் சிறுநீர் தொற்று காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார் என்று கூறினார்கள்.ஆனால் இன்று மருத்துவமனை நிர்வாகத்தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
 
மு.க.ஸ்டாலின் அவர்களின் வலது  காலின் இருந்த கட்டி ஒன்று அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.  இந்த சிகிச்சை முடிந்ததும் அவர் விடு திரும்புவார் என்று கூறினார்கள்.
 
இந்நிலையில் அறுவைசிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ஸ்டாலினை மதிமுக தலைவர் திரு. வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ : ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் இன்னும் சில நாட்களுக்கு வெளி நிகழச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிதார்.
 
இந்நிலையில் இன்று மாலை ஸ்டாலின் வீடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ...
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்