மாணவர்களுக்கு ’கற்பித்தல் வாசித்தம் இயக்கம்’ !

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:10 IST)
மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், இதனைச் சரி செய்யும் நோக்கில், ரூ.200 கோடி செலவில் ’கற்பித்தல் வாசித்தல் இயக்கம்’ திட்டம் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரொனா தொற்று நாள்தோறும் குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பட்ட்டு வரும் நிலையில் சமூபத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நேற்று தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.

அதில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை  நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.

இந்நிலையில்,  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்துப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், இதனைச் சரி செய்யும் நோக்கில், ரூ.200 கோடி செலவில் கற்பித்தல் வாசித்த இயக்கம் திட்டம் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்