புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம்! – புறக்கணித்தது தமிழக அரசு

திங்கள், 17 மே 2021 (11:20 IST)
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கை மீதான ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள், திட்டங்கள் முன்னதாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில திட்டங்களுக்கு தமிழகத்தில் தொடர் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநில கல்வி துறை செயலாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வித்துறை அமைச்சருடன் விவாதிக்காமல் கல்வி துறை செயலாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்