பொங்கல் பரிசு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு! – தமிழக அரசு!

திங்கள், 13 ஜனவரி 2020 (14:55 IST)
பொங்கல் பரிசு பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பை மற்றும் ரொக்கம் கடந்த 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல இடங்களில் தெரு வாரியாக தேதி ஒதுக்கப்பட்டு அரசு அங்காடிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையிலும் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு இன்னமும் பெறாதவர்கள், கொடுக்கப்பட்ட அன்று வராதவர்கள் உரிய சான்றுகளை காட்டி இன்று பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிறைய பேர் இன்னமும் பொங்கல் பரிசு பெறாமல் இருப்பதால் கால அவகாசத்தை ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்துள்ளது தமிழக அரசு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்