டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்பதைக் கோரி, குடும்பத்துடன் குடிக்கும் போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது குடித்துவிட்டு செல்லும் சிலர் ரகளையில் ஈடுபடுவதால், ஏற்கனவே புகாரும் எழுந்துள்ளது. இதனால், அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இதில் பேசிய பார்த்திபன், "டாஸ்மாக் கடையை மூடாவிட்டால், குடும்பத்தோடு குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்" என்று கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.