திரு.சிந்தை AMD.இஸ்மாயில் அவர்கள் காலமான செய்தியறிந்து விசாரித்த தமிழ்மகன் உசேன்

சனி, 13 ஆகஸ்ட் 2022 (21:24 IST)
தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள்உறுப்பினர் திரு.சிந்தை AMD.இஸ்மாயில் அவர்கள் காலமான செய்தியறிந்து அஇஅதிமுக கழக அவைத்தலைவர் திரு.தமிழ்மகன் உசேன் அவர்கள், தெய்வத்திரு.சிந்தை இஸ்மாயில் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து அண்ணாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தாெகுதி கடவூர் தெற்கு ஒன்றியம் சிந்தாமணிப்பட்டி பகுதியில் வசிக்கும்  அஇஅதிமுக மாநில சிறுபாண்மையினர் பிரிவு துணைத் தலைவர், தலைமைக் கழக மூத்த பேச்சாளர், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள்உறுப்பினர் திரு.சிந்தை AMD.இஸ்மாயில் அவர்கள் காலமான செய்தியறிந்து அஇஅதிமுக கழக அவைத்தலைவர் திரு.தமிழ்மகன் உசேன் அவர்கள், தெய்வத்திரு.சிந்தை இஸ்மாயில் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து அண்ணாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
 
கரூல் மாவட்டக் கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டலின்படி, தோகமலை மேற்கு ஒன்றியகழகச் செயலாளர் திரு.ரங்கசாமி, கடவூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்.
 
திரு S.கைலாசம், கடவூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.R.ரமேஷ், தோகைமலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.பழனிச்சாமி ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்