அஜித்துக்காக எழுதப்பட்ட கதைதான் திருமலை… பல ஆண்டுகளுக்கு சீக்ரெட்டை சொன்ன இயக்குனர்!

சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:52 IST)
இயக்குனர் ரமணா சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் திருமலை பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளன.

காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக இருந்த விஜய்யை முழு நீள ஆக்‌ஷன் படங்களின் கதாநாயகனாக மாற்றியது திருமலை படம். புதுமுக இயக்குனரான ரமணா இயக்கிய இந்த படத்தை கே பாலச்சந்தரி கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. ஜோதிகா, கௌசல்யா மற்றும் ரகுவரன் நடித்த இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் இப்போது திருமலை படத்தின் இயக்குனர் ரமணா அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் திருமலை கதையை அஜித்துக்காக எழுதியதாகக் கூறியுள்ளார். மேலும் “ பைக ரேஸர் கதை ஒன்றை அஜித்துக்காக நான் எழுதினேன். ஆனால் அந்த கதையை அஜித்திடம் சொல்ல முடியாதவாறு சிலர் பார்த்துக்கொண்டனர். அதன் பின்னர்தான் அந்த கதை விஜய்க்கு சென்று திருமலை திரைப்படம் ஆனது. ஆனால் திருமலை வெற்றிக்குப் பிறகு அஜித்தை சந்தித்த போது இந்த தகவலைக் கூறினேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்