முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:49 IST)
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர்   கூறியதாவது:

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக  தமிழகம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில்  4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  2028 ஆம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது. இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்