கட்டணம் இல்லாமல் அறுபடை வீடு தரிசனம்.. தமிழக அரசின் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

Mahendran

வெள்ளி, 13 ஜூன் 2025 (11:04 IST)
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் கட்டணம் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 
 
இந்தத் திட்டத்தின் கீழ், 1000 பக்தர்கள் ஐந்து கட்டமாக அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் 200 பக்தர்கள் தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்படுவார்கள்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்று கட்டணம் இல்லா பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த மாதம் இந்த அறுபடை  தரிசன பயணம் தொடங்க இருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் அறுபடை வீடு தரிசனம் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு 60 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்