இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கவில்லை: தமிழக முதல்வர் ஸ்டாலின்

வியாழன், 14 டிசம்பர் 2023 (11:47 IST)
இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கவில்லை எனவும், கடந்த 47 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
2015ஐ விட தற்போது அதிக மழை பெய்த போதிலும், மக்களை மீட்டுள்ளது திமுக அரசு என கூறிய முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என அத்தனை பேரும் களத்தில் நின்று பணியாற்றியதால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறினார்.
 
மேலும் ஒரு நாள் முழுவதும் இடைவிடாத மழை பெய்யும், வெள்ளம் வரும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
 
முதல்வரின் இந்த கருத்துக்கு  டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்ததாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்