வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்த தயாளு அம்மாள் அவர்களுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தயாளு அம்மாள் மூத்த மகன் மு.க. அழகிரி மதுரையிலிருந்து சற்றுமுன் சென்னைக்கு வந்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் தனது தாயாரை பார்க்க செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.