நாளை முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை: மீண்டும் ஊரடங்கா?

ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (07:55 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
 
திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் இன்று முதல் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் சென்னை மெரினாவில் அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
 
இருப்பினும் தினமும் ஆயிரம் பேர்களுக்கும் அதிகமாக வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் 
 
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வரிடம் இருந்து ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்