மேலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நாம் முதல் அலைஒயை மிகவும் வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்றும், ஆனால் தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றும் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நாட்டில் தேவையான அளவு முக கவசம் இருக்கிறது என்றும் அதனை அனைவரையும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் தடுப்பூசியை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு செலுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தும் நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கினார்