நாமக்கல் பகுதியில் ஏழை தொழிலாளர்களை ஏமாற்றி சிறுநீரகம் தானம் பெற்ற விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த அதிகாரியின் நியமனத்தை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. "சிறப்பு புலனாய்வு குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரியை நியமித்ததை மட்டுமே எதிர்க்கிறோம்" எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.