வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

வெள்ளி, 2 ஜூலை 2021 (13:20 IST)
தமிழக அரசு வன்னியர் சமூகத்தினருக்கு அளித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று இதன் மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீடு சட்டத்தை தாங்கள் படித்து பார்த்ததாகவும், அதற்கு தடைவிதிக்கப் போவதில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்