புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் தகாத உறவு கொண்ட சப்- இன்ஸ்பெக்டர்...

புதன், 10 அக்டோபர் 2018 (11:59 IST)
சேலம் மாவட்டத்தில் அன்னதானப்பட்டியை சேர்ந்த மலைவாசன் தன் மனைவி மணிமேகலையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதுபோல் கோபமடைந்த மணிமேகலை அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அங்கே  சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கலைச் செல்வன் என்பருக்கு மணிமேகலைக்கும்  பழக்கம் ஆகியுள்ளது, இந்த பழக்கத்தை மலைவாசன் பலமுறை எச்சரித்திருக்கிறார்.
 
இருப்பினும் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மலைவாசன் அவரது மனையியை கண்டித்து திருத்த முயன்றுள்ளார். இதை அறிந்து கொண்ட  கலைசெல்வன் மலைவாசனை வீட்டு சிறை வைத்திருக்கிறார். அப்போது 
அவரது சப்தத்தை கேட்ட அக்கம், பக்கம் வீட்டார்  அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார். .
 
இதனையடுத்து மலைவாசன், கலைசெல்வன் மீது புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதியவில்லை என தெரிகிறது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் மீது பல தரப்பிலிருந்தும் புகார் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்