குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!

வியாழன், 19 மே 2022 (19:23 IST)
குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!
குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடை உரிமையாளரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள குலோப்ஜாம் கடைக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர் பாலாஜி என்பவர் குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடைக்காரரிடம் தகராறு செய்தார் 
 
இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து கடை உரிமையாளரை மாணவர் பாலாஜி தாக்கியுள்ளார். இதனை அடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாலாஜி உடன் வந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் அவருக்கு போலீசார் வலைவீசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்