சென்னையில் வருகிற 29, 30, 31 தேதிகளில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கூட்டத்தில் முடிவு!

J.Durai

திங்கள், 15 ஜூலை 2024 (15:34 IST)
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குமு உயர்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
 
கூட்டத்திற்கு மயில் தலைமை தாங்கினார்.
 
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகியினர்.....
 
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிரச்சினையில் 243 அரசானையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வுதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வுவை பறிக்கும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி வருகிற 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் சென்னையில்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஆயுத்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்
 
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின சந்திப்பின் போது.
 
வின்சென்ட் பால்ராஜ், தாஸ்,முத்துராமசாமி.சண்முகநாதன், அண்ணாதுரை,
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்நீலகண்டன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்