ரூ.1 கோடி கொடுத்தால் தான் ஜாமின்: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி

வியாழன், 7 ஏப்ரல் 2022 (15:59 IST)
ஒரு கோடி கொடுத்தால் மட்டுமே இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது  மீனவர்கள் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதில், ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்