அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழக்கு: இன்று தீர்ப்பு

வியாழன், 7 ஏப்ரல் 2022 (07:45 IST)
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒருசில அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
 
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்