இலங்கை ரோந்து கப்பல் தமிழக மீன்பிடி படகு மீது மோதல்.. ஒரு மீனவர் உயிரிழப்பு

Mahendran

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (10:54 IST)
இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் தமிழக மீனவர் படகு மீது மோதிய விபத்தில் நான்கு மீனவர்கள் மூழ்கிதாகவும் இதில் மூன்று பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இன்று இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதால் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதாகவும் அதிலிருந்து நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் 3 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளன.

நெடுந்தீவு அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும் இலங்கை கடற்படை கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகு தலைகுப்புற கவிழ்ந்ததாகவும் காயத்துடன் மீட்கப்பட்ட மூன்று பேர் புங்குடு தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை ஏற்கனவே ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தற்போது விசைப்படகுகள் மோதி விபத்து ஏற்படுத்தியது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்